(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது புத்தளம் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் மதுரங்குளி - மஹகும்புக்கடவல ஊடாக ஆடிகம வரையான 9.7 கிலோ மீற்றர் தூரத்திலான வீதியை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்வதாகவும் , மேலும் 11.5 கிலோ மீற்றர் வீதியை இரண்டாம் கட்டமாக அபிவிருத்தி செய்வதாகவும் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
முதற்கட்ட வீதி நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு 222 மில்லியன் ரூபா நிதியும் , இரண்டாம் கட்ட வீதி நிர்மாணப்பணிகளுக்கு 250 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை சில மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும் என்று பொறிறியலாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீதிகள் தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் ஏ மற்றும் பீ தர சாலைகளை இணைக்கும். அதற்கமைய கொழும்பு - புத்தளம் வீதியூடாக சிலாபம் - ஆணைமடு வீதி இதனுடன் தொடர்புபடும்.
விவசாய உற்பத்திகளை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லல், மக்களின் நாளாந்த செயற்பாடுகளை இலகுவாக்குதல், புத்தளம் மற்றும் ஆணைமடு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு இலகுவாகச் செல்வதற்கு இந்த வீதி நிர்மாணப்பணிகள் பெரும் உதவியாக அமையும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM