தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்று சேவைக்கு திரும்புமாறு அதிபர் - ஆசிரியர்களிடம் கோரிக்கை - பேராசிரியர் கபில பெரேரா

Published By: Digital Desk 3

24 Sep, 2021 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

வரவு - செலவு திட்டம் என்பது இரகசியமானதொரு விடயமாகும். அதனை சமர்ப்பிக்க முன்னர் அதனூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களை பகிரங்கப்படுத்த முடியாது. எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு சேவைக்கு திரும்புமாறு அதிபர் - ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது வரவு - செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டால் அதனை அறிவிக்க முடியும். அது குறித்து எனக்கும் தெரியாது. எனவே பாராளுமன்றத்தில் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை காத்திருக்குமாறு கோருகின்றோம்.

மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை சேவைக்கு திரும்புமாறு கோருகின்றோம். அவ்வாறு சேவைக்கு திரும்பும் பட்சத்தில் அதிபர் - ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் மதிப்பு மேலும் உயர்வடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27