கார் ஆசனத்தில் மின்னேற்றப்பட்டுக் கொண்டிருந்த கையடக்கத்தொலைபேசி வெடித்ததால் அந்தக் கார் முழுமையாக தீப்பற்றி எரிந்து கருகிய விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் போர்ட் சென். லூசி எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிரபல தென் கொரிய பல்தேசிய கம்பனியொன்றினால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியே இவ்வாறு வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
அந்தக் கம்பனி மேற்படி புதிய ரக கையடக்கத் தொலைபேசிகள் தீப்பற்றி எரியும் வாய்ப்புள்ளன என எச்சரித்து அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தி அந்த தொலைபேசிகளை மீளப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க அதிகாரிகள் அந்த ரக கையடக்கத் தொலைபேசிகளை விமானங்களில் பயன் படுத்துவதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM