பைசர் மற்றும் பயோஎன்டெக்கின் கொவிட்-19 தடுப்சிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில் உள்ளவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர், குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ்களை பெறுவார்கள் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதன்கிழமை, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது கடுமையான கொவிட்-19 இன் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் தடுப்பூசியின் மேலதிக டோஸ்களை பெற தகுதியுடையவர்கள் என்று கூறி இந்த அனுமதியினை வழங்கியுள்ளது.
அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுகளுக்கு மத்தியில் அதிகம் ஆபத்தில் தங்களது பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் 16 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்க ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM