பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் புத்தக நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ்மா அதிபர் சிடி.விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளரினால் எழுதப்பட்ட கோரிக்கையை அடுத்தே பொலிஸ்மா அதிபர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
கொவிட்-19 நிலைமைகள் காரணமாக புத்தக நிலையங்கள் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளமையினால் புத்தக வெளியீட்டுத் தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது.
அத்துடன் புத்த நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்களின் கல்வியும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையில் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் இத்தகைய கோரிக்கையினை கருத்திற் கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலத்திலும் புத்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் சுகாதார பணிப்பளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM