லொஹான் ரத்வத்தை விவகாரம் குறித்து பிரத்தியேக விசாரணை முன்னெடுக்கப்படும் - டலஸ்

Published By: Gayathri

22 Sep, 2021 | 02:33 PM
image

(எம்.மனோசித்ரா)

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கட்சி என்ற ரீதியில் பிரத்தியேகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைய இதுவரையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் இது தொடர்பில் விசாராணை குழுவொன்றை துரிதமாக செயற்படும் வகையில் நியமிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் வெற்றி தங்கியிருப்பது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலாகும். எனவே மக்களின் நம்பிக்கையை பேணுவது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது பொறுப்பாகும். அரசாங்கம் இது தொடர்பில் முறையாக செயற்படும் என்று நான் நம்புகின்றேன்.

அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு ஆளுந்தரப்பின் மொனராகலை பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இவ்வாறான தீர்ப்புக்கள் அத்தியாவசியமானவையாகும். இந்நிலையில் லொஹான் ரத்வத்தை விவகாரம் தொடர்பில் கட்சி பிரத்தியேகமாகவும் அரசாங்கம் பிரத்தியேகமாகவும் செயற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51