மைத்திரி, கோட்டா கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சர் சரத் வீரசேகர 

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 09:49 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை ஆரம்பித்திருக்கின்றோம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Articles Tagged Under: சரத் வீரசேகர | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை நேர கேள்வியின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார, முன்னாள் ஜனாதிபதி கொலை சதித்தி்ட்டம் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ளன. இவ்வாறான நிலையில் இதுவரை அதுதொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் குமார் என்பவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு சமர்ப்பி்த்திருந்த குரல் பதிவை அடிப்படையாகக்கொண்டு 2018 செப்டம்பர் 15 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் பணிப்பாளர் நாலக்க சில்வா கைது செய்யப்பட்டார். அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை 2019 செப்டம்பர் 9ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அத்துடன் இந்த கொலை சதிதிட்டத்துக்கு அரசிய கட்சிகள் எதுவும் சம்பந்தம் இல்லை. என்றாலும் 2019 மே மாதம் நாலக்க சில்வா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் சேவையை தொடர்வதற்கு விண்ணப்பித்திருந்தார். என்றாலும் 2019 டிசம்பர் மாதம் அரச சேவை ஆணைக்குழுவால் அது நிராகரிக்கப்பட்டது.

நாலக்க சில்வா தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் விசாரணை பிரிவால் ஆரம்பகட்ட விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணை அறிக்கை அதுவரை காலமும் நீதிமன்றில் இருந்தமையால் விசாரணை தாமதடைந்திருக்கின்றது. தற்போது அந்த அறிக்கையை பெற்றுககொண்டு அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22