மைத்திரி, கோட்டா கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சர் சரத் வீரசேகர 

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 09:49 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை ஆரம்பித்திருக்கின்றோம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Articles Tagged Under: சரத் வீரசேகர | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை நேர கேள்வியின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார, முன்னாள் ஜனாதிபதி கொலை சதித்தி்ட்டம் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ளன. இவ்வாறான நிலையில் இதுவரை அதுதொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்துட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் குமார் என்பவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு சமர்ப்பி்த்திருந்த குரல் பதிவை அடிப்படையாகக்கொண்டு 2018 செப்டம்பர் 15 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் பணிப்பாளர் நாலக்க சில்வா கைது செய்யப்பட்டார். அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை 2019 செப்டம்பர் 9ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அத்துடன் இந்த கொலை சதிதிட்டத்துக்கு அரசிய கட்சிகள் எதுவும் சம்பந்தம் இல்லை. என்றாலும் 2019 மே மாதம் நாலக்க சில்வா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் சேவையை தொடர்வதற்கு விண்ணப்பித்திருந்தார். என்றாலும் 2019 டிசம்பர் மாதம் அரச சேவை ஆணைக்குழுவால் அது நிராகரிக்கப்பட்டது.

நாலக்க சில்வா தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் விசாரணை பிரிவால் ஆரம்பகட்ட விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணை அறிக்கை அதுவரை காலமும் நீதிமன்றில் இருந்தமையால் விசாரணை தாமதடைந்திருக்கின்றது. தற்போது அந்த அறிக்கையை பெற்றுககொண்டு அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41