பால்மா, கோதுமை, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் இறுதித் தீர்மானம் நாளை : பந்துல

Published By: Gayathri

21 Sep, 2021 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை கூடவுள்ள வாழ்க்கை செலவுகள்  தொடர்பிலான  குழுவில் எடுக்கப்படும். 

உலக சந்தையின் விலையேற்றத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் விலையில் சிறிதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பால்மா விலையேற்றம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பட்டமை, கப்பல் போக்குவரத்து செலவு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை  அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதி நிறுவனத்தினர் கடந்த 18 ஆம் திகதி நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

350 ரூபாவினால் விலையை அதிகரிக்க முடியாது என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளதுடன், 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் விலையேற்றத்திற்கு இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை.

பால்மா,கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் நாளை எடுக்கப்படும். உலக சந்தையின் விலையேற்றத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் விலையில் சிறிதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பால்மா விலையேற்றம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ள வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான குழுவில் எடுக்கப்படும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் தற்போதைய விலை 945 ரூபாவாக காணப்படுகிறது. 200 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டால் 1145 ரூபாவிற்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45