பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட மீண்டும் பதவியேற்றுள்ளார்.
சபாநாயகர் முன்னிலையில் சற்று முன்னர் உறுதியுரை செய்து கொண்ட அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக ஜயந்த கெட்டகொட கடந்த ஜூலை மாதம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.
கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த கெட்டகொட, கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆவார்.
1991 இல் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடுவலை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1999 மேல் மாகாண சபைக்கு தெரிவாகினார்.
2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான கெட்டகொட இன்றுடன் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM