நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 45 ஆண்களும் 48 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒரு ஆணும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும், 12 பெண்களுமாக 24 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32 ஆண்களும் 36 பெண்களுமாக 68 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொவிட் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படும் வாராந்த கொவிட் பகுப்பாய்வு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டு;ள்ளது.
அதற்கமைய 2020 மார்ச் மாதம் முதல் இம்மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5788 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நூற்றுக்கு 52.6 சதவீதமாகும். மேல் மாகாணத்துடன் ஒப்பிடும் போது ஏனைய மாகாணங்களில் மரணங்கள் பதிவாகும் வீதம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை வரை 836 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 505 327 ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 433 093 பேர் குணமடைந்துள்ளனர். 60 109 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM