பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசுக்கு எதிராக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் பங்குபற்றிய கூட்டத்தில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
புதிய வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்ட விவகாரம், பெற்றோல், டீசல் விலை உயர்வு, பொது சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆ ராசா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்திய அரசுக்கு எதிரான கருப்புக் கொடி ஏந்தி, கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM