எம்.ஆர்.எம்.வசீம்
பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்துக்கொள்வது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இராஜதந்திர மட்டத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல்களை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அந்த நாடுகளின் அரச தலைவர்கள், சுகாதார பிரிவினர் மற்றும் சுற்றுலா அதிகாரிகளை அறிவுறுத்துவதற்கு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மன், கனடா, ஸ்பைன். சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடு போன்ற நாடுகள் இலங்கைக்கு பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கின்றன. என்றாலும் இங்கிலாந்து, ஜப்பான் தனது சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொண்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன.
கடந்த காலங்களில் நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தினாலேயே இந்த நாடுகளின் சிவப்பு பட்டியலில் இங்கையை உள்ளடக்கி பயணக்கட்டுப்பாடு விதித்திருந்தன.
எனவே நாட்டின் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவேண்டி இருப்பதால், சுற்றுலா பயணிளுக்கு இருக்கும் தடைகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.
அதேபோன்று சுகாதார பிரவினரின் ஒருசில சுகாதார வழிகாட்டல்கள் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்திருக்கின்றது. அதுதொடர்பாகவும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM