எம்.எப்.எம்.பஸீர்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, நேற்று கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார பாதுகாப்பு ஆடைகளை அணிந்த வண்ணம் சுமார் 20 பேர் வரையில் இணைந்து சமூக இடைவெளியைப் பேணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சகபாடிகளுக்கு மது விருந்து , பொது மக்களுக்கு கடுங்கஷ்டம், மதுபான விற்பனை நிலையங்கள் அத்தியவசிய சேவையா?, பணக்காரர்களுக்கு பார்ட்டி - ஏழைகளுக்கு துன்பம், பல்பொருள் அங்காடிகள் திறப்பு - நடைபாதை வர்த்தகர்கள் தவிப்பு உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை கலைக்க உத்தரவிட்டனர்.
இதன்போது அர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க எந்த அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என ஆர்ப்பட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
தமது சுய தொழில் முயற்சிகளுக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது குறித்த இடத்திலிருந்த கோட்டை பொலிஸ் நிலைய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ' இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது.' என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆர்ப்பாட்ட கோஷங்களை முன் வைத்துக் கொண்டிருந்த போது திடீரென பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றினர்.
பின்னர் அவ்விருவரும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM