தேசியன்
அரசாங்கத்தின் வசம் இருந்த பெருந்தோட்டங்களை தனியார்கம்பனிகள் வசம் ஒப்படைக்கும் பேச்சுக்கள் 1990 களில் இடம்பெற்ற போது அதற்கு அமரர் சௌமியமூர்த்திதொண்டமான் சம்மதம் தெரிவித்திருந்தமைக்குஅவரது தீர்க்கதரிசனமே காரணம்.
அரசாங்கத்திடம் பெருந்தோட்டங்கள் இருந்தால் அவற்றைஎந்த நேரத்திலும் சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள்அதிகமாகவே இருந்தன. 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டம் ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களே அதற்குக் காரணம்.
பிராந்திய கம்பனிகள் மூலம் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்நீண்ட கால குத்தகைக்கு தோட்டங்களை வழங்குவதன் மூலம், தோட்டக்காணிகள் நீண்ட காலத்துக்குபாதுகாக்கப்படும் என்றும் இது தொழிலாளர்களின் இருப்புக்கும் பாதுகாப்பு என்றே அவர்கருதினார். அதன் காரணமாகவே 1992 ஆம் ஆண்டு 22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குதோட்டங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டன.
குறித்த தோட்டப்பகுதிகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட, அதற்கு பிரத்தியேகமான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுஅங்கீகாரம் கிடைத்த பின்னரே அவற்றை தொடரலாம். கடந்த காலங்களில் அவ்வாறு முன்னெடுக்கப்பட்டவீடமைப்பு திட்டங்களிலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது.
இவ்வாறு பிராந்திய கம்பனிகள் வசமான தோட்டங்கள் இன்றுவரை பாதுகாப்பாக இருக்கும் அதே வேளை, அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களான இலங்கைஅரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் உள்ளதோட்டங்களின் நிலைமையை பற்றி புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM