இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 2

18 Sep, 2021 | 11:04 AM
image

எம்.ஆர்.எம்.வசீம்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் நடவடிக்கை மனித உரிமை மீறல் மாத்திரமல்லாது, சட்டத்தின் ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும்.

அதனால் ராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று கூடியபோது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று, மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு அழுத்தங்களை விடுத்திருந்தமை சிறைக்கைதிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினையாகும்.

அத்துடன் குறித்த இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை மனித உரிமை மீறல் மாத்திரமல்லாது, சட்டத்தின் ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும்.

அதேபாேன்று மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இல்லாமல் போகின்றது. அதன் மூலம் ஜனநாயகம் மற்றும்  சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் ஒன்றின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறு என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவதற்கும் காரணமாகின்றது என்பது தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

எனவே இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளின் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக, இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு செயற்படுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18