15-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பெற்றோரின் அனுமதியுடன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (17) காலை நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு விசேட குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின்போது சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்.
இதன்போது 12-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேலா குணவர்தன ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்.
மருத்துவ நிபுணரின் மேற்பார்வையின் கீழ் பெற்றோரின் அனுமதியுடன் தொடர்புடைய கிளினிக்குகளில் மட்டும் 12-19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
12-15 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவிடமிருந்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.
உலகின் பிற பகுதிகள் இன்னும் இந்த திட்டத்தை நோக்கி நகரவில்லை என்றும், தடுப்பூசிகள் தற்போது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவதாகவும் அந்த குழு குறிப்பிட்டது.
அதன்படி 15 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தலை விரைவாக முடிக்கவும், மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இது தொடர்பில் பெற்றோர்களுக்கு முறையான தெளிவுபடுத்தலின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விளக்கியதுடன், நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி அனைத்து சிறுவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM