தனிமைப்படுத்தல் ஊரடங்குக் சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகி இருப்பதாகவும் , அவர்கள் அனைவரும் (இன்று) 17.9.2021 உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டடுள்ளதாகவும் பதுளை மாநகர பிரதம பொது சுகாதாரப் பரிசோதகர் பியல்பத்ம தெரிவித்தார்.
பதுளைப் பொலிசார், இராணுவத்தினர், பொது சுகாதாரப்பரிசோதகர்கள் ஆகியோர். இனைந்து பதுளை மாநகரில் மேற்கொன்ட சுற்றி வலைப்பின் போது மேற்கொண்ட “ரெபிட் என்டிஜன்” பரிசோதனையின் போதே, மேற்படி தொற்றாளர்கள் அடையாயம் காணப்பட்டனர்.
பதுனை மாநகரில் எக்காரணமுமின்றி வெறுமனே சுற்றித்திரிந்த 250 பேர் “ரெபிட் என்டிஜன்” பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களின் பரிசோதனை அறிக்கைக்கமைய 40 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் பதுளை, பிந்துனுவௌ, ககாகொல்ல கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பதுளை மாநகரில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி, வெறுமனே சுற்றித் திரிந்த மேற்குறிப்பிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, பொலிசார் தெரிவித்தனர்.
அத்தோடு ஹப்பத்தளை நகரில் இன்று 17.9.2021 மேற்கொள்ளப்பட்ட “ரெயிட் என்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு, கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.
ஹப்புத்தளை நகரில் 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 32 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM