கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்

Published By: Digital Desk 3

17 Sep, 2021 | 01:55 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் வசதியினை பெற்றுள்ள பொது மக்கள்  தங்கள் மாதாந்த நீர் பட்டியல் கொடுப்பனவுகளையும் நிலுவை கொடுப்பனவுகளையும்  தாமதமின்றி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

தற்போதைய முடக்க நிலை மற்றும்  கொரோனா தொற்றினை  கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை  பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும் எனவும் அதற்காக வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments  எனும் எமது இணையத்தளத்தைிற்குச் சென்று  தன்னியக்க பணமரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாக கட்டணங்களை செலுத்திக் கொள்ள முடியும்.

அத்தோடு, பொது மக்கள்  தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளை தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை, கட்டணங்கள் தொடர்பான அனைத்து  விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாக கட்டணங்களையும் செலுத்திகொள்ள முடியும்.

மேலும், பொது மக்களின் நலன் கருதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  155 ஆம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்திலும் இம் மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம்  நீர்ப் பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் எனவும்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மேற்படி முகவரியில் அமைந்துள்ள எமது காரியாலயத்திற்கோ, அல்லது  021 2283981 எனும்  தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும்  அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17