போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தலை முன்னெடுக்க வேண்டும் - ஹனா சிங்கர்

Published By: Digital Desk 4

16 Sep, 2021 | 09:19 PM
image

(நா.தனுஜா)

சிறைத்தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஐ.நா.  வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் | Virakesari.lk

போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளைக் கையாளவேண்டிய முறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தன்னார்வ மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் நேற்று  புதன்கிழமை நீதியமைச்சர் அலிசப்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.

இதுபற்றித் தெளிவுபடுத்தும் வகையில் ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சிலர் குற்றவியல் தண்டனைகள் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீளக்கூடும். இருப்பினும் மிகையான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தண்டனைகளை எதிர்கொள்ளக்கூடிய இயலுமையைக்கொண்டிருப்பதென்பது ஒப்பீட்டளவில் குறைவாகும். அதுமாத்திரமன்றி ஒருவரை சிறையில் அடைப்பதன் ஊடாக சமூகத்தின் போதைப்பொருள் பாவனையைக் குறைக்கமுடியாது. 

எனவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 17:10:10
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08