(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் பதிவான வாகன விபத்துக்களில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர் 13 ஆம் திகதி வரையிலான 3 வாரங்களில் மட்டும் பதிவான 63 விபத்து சம்பவங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இந்த விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் காரணமாக பதிவான விபத்துக்கள் என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, அவ்வாறான விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
மொத்த விபத்துக்களில் 56 விபத்துக்கள் சாரதிகள், செலுத்துநர்களின் கவனயீனம் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், ஒரே ஒரு விபத்து மட்டுமே தொழில் நுட்ப கோளாரினால் பதிவானது எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இந்நிலையில் கவனயீனமாக வாகன செலுத்தல் மற்றும் அதிக வேகம் ஆகியன விபத்துக்களுக்கு பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM