தமிழகத்தில் காலியாக இருக்கும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்தியலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தனர்.
காலியான இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அத்துடன் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டெம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 22ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் டொக்டர் கனிமொழி என்விஎன் சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்கள்.
இதனிடையே அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் மறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்துல்லா வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்தது. விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த இருவரும் வெற்றி பெற்றால், மாநிலங்களவையில் திமுகவின் பலம் பத்தாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM