கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நாடு மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொவிட்-19 தடுப்பு பணிக்குழுவுக்கு அறிவுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் வேகமான பரவல் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலமுறை நீடிக்கப்பட்டு செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணிவரை அமுலில் உள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களில் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM