மாத்தளை, கலேவல – மொரகொல்ல பகுதியில் படி ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியில் இருந்து படி ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாத்தளை நோக்கிச் சென்ற போது கலேவல – மொரகொல்ல பகுதியில் வைத்து இவ் விபத்து இன்று (13) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் படி ரக வாகனத்தை செலுத்திச் சென்ற வாழைச்சேனை – செம்மண்ணோடை வாஹித் வீதியைச் சேர்ந்த மூன்று வயது பெண் பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய புகாரி இர்ஷாத் என்பவர் மரணமடைந்துள்ளார்.
அத்துடன், படி ரக வாகனத்தில் பயணித்த வாகன உரிமையாளர் ஆபத்தான நிலையில் மொரொகொல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM