” விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சி­யினை முன்­னெ­டுக்க முடி­யாது ”

Published By: Priyatharshan

18 Dec, 2015 | 09:34 AM
image

விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­படும் உர மானியம் உட்­பட சில கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நேற்­றைய தினம் நாட­ளா­விய ரீதியில் உள்ள விவ­சா­யிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்ட பேரணி ஒன்றில் ஈடு­பட்­டனர்.

கொழும்­பு ­லிப்டன் சுற்­று­வட்­டத்­திற்கு முன்­பாக நாட­ளா­விய ரீதியில் இருந்து வரு­கை ­தந்­தி­ருந்த அனைத்து இலங்கை விவ­சாய சம்­மே­ளத்­தினை சேர்ந்த விவ­சா­யிகள் மற்றும் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் ஒன்று சேர்ந்தே இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணி­யினை முன்­னெ­டுத்­தனர். குறித்த இடத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட பேர­ணி­யா­னது விகா­ரமா தேவி பூங்கா வீதிஇ மற்றும் தேசிய நூல­கத்­திற்கு அரு­கா­மையில் உள்ள வீதியின் ஊடாக அல­ரி­மா­ளி­கையை நோக்கி செல்ல முற்­பட்ட வேளை அங்கு பாது­காப்பு கட­மைக்­காக பெரு­ம­ள­வி­லான பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தோடு பாது­காப்பு வேலிகள் அமைத்­துடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாக­னங்­களும் நிறுத்­தி­ வைக்­கப்­பட்டி­ருந்­தன.

பேர­ணி­யினை முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்டக்காரர்கள் அரசே எமக்­கான உர மானி­யத்­தினை வழங்­கிடுஇ விவ­சா­யி­களை ஏமாற்றி எமது சாபத்­திற்கு உள்­ளா­காதேஇ நெல்­லுக்­கான நிலை­யான விலை­யினை உறு­திப்­ப­டுத்துஇ விவ­சா­யி­க­ளுக்­கான பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுத்தா போன்ற கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்து சென்­றனர்.

இத­னி­டையே அல­ரி­மா­ளி­கை­யினை நோக்கி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் செல்ல முற்­பட்ட போது அங்கு பாது­காப்பில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலை ஏற்­பட்­ட­தோடு குறித்த பிர­தே­சத்தில் பதற்ற நிலை­யொன்று காணப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட விவ­சா­யிகள் அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பு ஒன்றை பெற்­றுத்­த­ரு­மாறு வேண்­டினர். இவ்­வா­றான நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்­பி­லான வாதப்­பி­ர­தி­வா­தங்­களில் கலந்து கொண்­டி­ருப்­ப­தனால் பிர­த­மரின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸார் கேட்டு கொண்­டனர். இருந்த போதும் இதற்கு விவ­சா­யி­க­ளினால் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து விவ­சா­யிகள் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு அல­ரி­மா­ளி­கையின் முன்னால் ஆர்ப்­பாட்­டத்தை தொடர்ந்­தனர்.

இதன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த அகில இலங்கை விவ­சாய சம்­மே­ளனத் தலைவர் நிமால் குல­சே­கர,

எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெ­லும்­பாக எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் செயற்­படும் நாட­ளா­விய ரீதியில் உள்ள விவ­சா­யிகள் தமது ஜீவ­னோ­பாய தொழிலை முன்­னெ­டுப்­பதில் காலங்­கா­ல­மாக பல்­வேறு ரீதி­யான பிரச்­சி­னை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அந்­த­வ­கையில் தேசிய அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்­டத்தில் விவ­சா­யி­க­ளுக்­கான உர மானியம் நீக்­கப்­பட்­டுள்­ளது. நெல்­லுக்­கான நிரந்­தர விலை­களில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் பல்­வேறு செயற்­றிட்­டங்கள் நல்­லாட்­சி­யினால் ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் வரவு செலவு திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அர­சாங்கம் ஒன்றை நன்­றாக புரிந்து கொள்ள வேண்டும். அதா­வது விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சி­யினை முன்­னெ­டுக்க முடி­யாது. அர­சாங்­கத்­திற்கு நாம் சவால் ஒன்­றினை விடுக்­கின்றோம். அதா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவு திட்­டத்தில் விவ­சா­யி­க­ளுக்கு நன்மை பயக்கும் ஒரு விட­யத்தை ஏதேனும் ஒரு விவ­சாய சங்­கத்­தினால் ஊடக வாயி­லாக குறிப்­பிட வைக்க முடி­யுமா? அவ்­வாறு முடி­யு­மானால் அந்த சவாலை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நாம்பலமுறை அரசாங்கத்திடம் எம­து கோரிக்கைகளை முன்வைத்த போதும் எமக்கான தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே இந்த போராட் டத்தை முன்னெடுத்தோம். தொடர்ந்தும் எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமானது அசமந்த போக்கினை கடைப் பிடிக்குமாயின் அரசாங்கமானது பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச் சரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08