விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்திருந்த அனைத்து இலங்கை விவசாய சம்மேளத்தினை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்தே இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுத்தனர். குறித்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது விகாரமா தேவி பூங்கா வீதிஇ மற்றும் தேசிய நூலகத்திற்கு அருகாமையில் உள்ள வீதியின் ஊடாக அலரிமாளிகையை நோக்கி செல்ல முற்பட்ட வேளை அங்கு பாதுகாப்பு கடமைக்காக பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு பாதுகாப்பு வேலிகள் அமைத்துடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பேரணியினை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசே எமக்கான உர மானியத்தினை வழங்கிடுஇ விவசாயிகளை ஏமாற்றி எமது சாபத்திற்கு உள்ளாகாதேஇ நெல்லுக்கான நிலையான விலையினை உறுதிப்படுத்துஇ விவசாயிகளுக்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தா போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.
இதனிடையே அலரிமாளிகையினை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலையொன்று காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதமருடனான சந்திப்பு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டினர். இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களில் கலந்து கொண்டிருப்பதனால் பிரதமரின் செயலாளருடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு பொலிஸார் கேட்டு கொண்டனர். இருந்த போதும் இதற்கு விவசாயிகளினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பியவாறு அலரிமாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை விவசாய சம்மேளனத் தலைவர் நிமால் குலசேகர,
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்படும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் தமது ஜீவனோபாய தொழிலை முன்னெடுப்பதில் காலங்காலமாக பல்வேறு ரீதியான பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். அந்தவகையில் தேசிய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கான உர மானியம் நீக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான நிரந்தர விலைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்கள் நல்லாட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது விவசாயிகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி ஆட்சியினை முன்னெடுக்க முடியாது. அரசாங்கத்திற்கு நாம் சவால் ஒன்றினை விடுக்கின்றோம். அதாவது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் ஒரு விடயத்தை ஏதேனும் ஒரு விவசாய சங்கத்தினால் ஊடக வாயிலாக குறிப்பிட வைக்க முடியுமா? அவ்வாறு முடியுமானால் அந்த சவாலை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நாம்பலமுறை அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன்வைத்த போதும் எமக்கான தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே இந்த போராட் டத்தை முன்னெடுத்தோம். தொடர்ந்தும் எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமானது அசமந்த போக்கினை கடைப் பிடிக்குமாயின் அரசாங்கமானது பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச் சரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM