(எம்.மனோசித்ரா)
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய இவ்வாறான மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஒக்டோபரில் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ளன. இந்த தடுப்பூசிகளை பொறுத்தமான முறையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரைகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இது தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழு அவர்களின் பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர் அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதே வேளை விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்று பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கமைய இவ்வாறான மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM