சப்ரகமுவ மாகாண உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Published By: Priyatharshan

14 Sep, 2016 | 12:37 PM
image

சப்ரகமுவ மாகாணத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்குவது தொடர்பான முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் முகமாக இறக்குவானை பரியோவான் கல்லூரியில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிPவுகள் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர்.

எனினும் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நுவரெலிய மாவட்டத்தில் கல்வி கற்ற சப்ரகமுவ மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

இது தொடர்பில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

எனினும் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கு காலம் தேவைப்படும் என்பதால் இம்முறை குறித்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம். சந்திரகுமார்,  பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42