623 பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளாதாக போலிப் பிரச்சாரம் - பகிரங்க விவாதத்திற்கு தயார் என்கிறார் அமைச்சர் பந்துல

Published By: Gayathri

10 Sep, 2021 | 05:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை விமர்சித்து எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

இவ்விடயம் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுப்பட தயாராக உள்ளேன் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கையிருப்பு முகாமைத்துவம், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினாலும் கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்று தாக்கத்தினாலும் வெளிநாட்டு கையிருப்பில் பெரும் பாதிப்பு  ஏற்பட்டன.

இவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் நிதிச்சபை கடனை கட்டுப்படுத்துவதற்காக கடன்பத்திரங்கள் விநியோகிக்கும்போது முறையான திட்டங்களை தற்போது கையாள்கிறது.

இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்கள் முழுமையாக தடைசெய்யப்படவில்லை. அத்துடன் இறக்கமதி வரியும் அதிகரிக்கப்படாது.இதனால்தேசிய மட்டத்தில் இப்பொருட்களுக்கான தட்டுப்பாடு விலை அதிகரிப்பும் ஏற்படாது.

அனைத்து வங்கி கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவமாக மத்திய வங்கி இதனை செயற்படுத்தியுள்ளது. அத்துடன் கடன் கட்டுப்பாடு முறைமைகளில் சிறந்த கட்டுப்பாட்டு முறைமைகள் தற்போது  பேணப்படுகிறது.

இதற்கமைய இந்த 623 பொருட்களுக்காக  கடன்பத்திரம் வெளியிடுவதற்கான முழுமையான பெறுமதி வைப்பில் வைக்கப்பட்ட நிலையில் வங்கிகள்  கடன் பத்திரங்களை வெளியிடும்.

இதன்நோக்கம் 623 பொருட்கள் இறக்குமதி செய்யும்போது நிதி வெளிச்செல்வதை கட்டுப்படுத்துவதாகும்.

உதாரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யும்போது  வங்கிக் கட்டமைப்பினால்  முழு பெறுமதியும் வைப்பிலிடப்படாது.

ஒரு பகுதி மாத்திரம் வைப்பிலிடப்பட்டு, பொருட்கள் கப்பலுக்கேற்றப்பட்டதன் பின்னர்  தேவையான ஆவணங்கள்  வங்கிகளுக்கு அனுப்பட்டு வங்கியினால் அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர்தான் மிகுதித்தொகை செலுத்தப்படும்.

ஆரம்பத்தில் 25 சதவீதத்தை வைப்பிலிட்டு 623 பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 

ஆனால் தற்போது 100 சதவீதத்தையும் முழுமையாக வைப்பிலிட்டு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. 

இவ்விடயம் தொடர்பில் பேராசிரியர் ஹர்ஷடி சில்வாவுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு...

2026-01-20 18:30:07
news-image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தேசிய கல்வி...

2026-01-20 18:19:13
news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11