பாற்பண்ணை என்ற போர்வையில் மலையகத்தில் வெளியாட்களை குடியமர்த்துவதற்கு சதித்திட்டம் - வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 3

11 Sep, 2021 | 11:03 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பால் உற்பத்தி செய்வதற்கென தெரிவித்து மலையக பெருந்தோட்டங்களில் அரசாங்கம் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுக்கொள்ள எடுத்திருக்கும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மலையத்தில் வெளியார்களை திட்டமிட்டு குடியேற்றுவதற்கான சதித்திட்டமாே என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பல பாற்பண்ணைகள் இருக்கும் நிலையில் அதனை அபிவிருத்தி செய்யாமல், மலையகத்தில் பெருந்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான காணிகளை பெற்றுக்கொண்டு புதிதாக பாற்பண்ணை அமைக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

அதற்காக அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

மலையக மக்களுக்கு பல அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.

அவ்வாறான நிலையில் மலையகத்தில் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கான திட்டமாகவே, அங்குள்ள ஆயிரக்கணக்கான காணிகளை பெற்றுக்கொண்டு, வெளியாட்களுக்கு வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மலையக மக்கள் எப்போதும் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர்கள். அதனை இல்லாமலாக்கவேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04