வடக்கு மாகாணத்தில் நேற்று (08) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் செப்டம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 57 தொற்றாளர்களும், மன்னாரில் 27 தொற்றாளர்களும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும், கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31 ஆயிரத்து 375 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 651 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM