மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக தங்கி இருந்து படித்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட விகாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.
மட்டு விகாரையில் 11 வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதம பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
குறித்த விகாரையில் பிக்குவாக தங்கி இருந்து படித்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்குவை கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிசார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று தீவிரம் காரணமாக குறித்த பிக்குவை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட முடியாத நிலையில் கணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM