கசிப்பு உற்பத்தி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் நோர்வூட்டில் கைது

Published By: Digital Desk 4

07 Sep, 2021 | 03:03 PM
image

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவை மீறி கசிப்பு உற்பத்தி செய்து வந்த இடத்தை திடீர் சோதனை நடத்திய போது 3,000 மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் 20,000 மில்லிலீட்டர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசிப்பை வடிகட்ட பயன்படும் சுருள்கள், பீப்பாய்கள், கேன்கள், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டரையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றினர்.

சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இதனை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, நோர்வூட் கியூ தோட்டம் சென்ஜோன்டிலரி பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரையும் நேற்றிரவு நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் தினங்களில் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் மூலம் மத்திய மலைநாட்டில் உள்ள தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24