அவசரகால நிலைமையை அறிவித்தமை ஜனாதிபதியின் ஜனநாயக செயற்பாடு - அமைச்சர் வாசுதேவ

Published By: Gayathri

07 Sep, 2021 | 09:57 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்களை தடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது. இது ஜனாநாயக செயற்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சபையில் தெரிவித்தார். 

அதேபோல் தற்போது இடம்பெறுவது வியாபார மாபியா அல்ல, வியாபார பயங்கரவாதம். இதனை அவசரகால சட்டத்தின் மூலமாகவே தடுக்க முடியும். அதனையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனவும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் பதுக்கல் நிலையை தடுக்க சாதாரண சட்டத்தை கையாள முடியும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். 

சாதாரண சட்டத்தில் இதனை கையாள நடவடிக்கை எடுத்தால் காலம் கடக்கும். நீதிமன்றங்களை நாடி இறுதியாக தீர்ப்பு ஒன்று கிடைக்கும் வரைக்கும் மக்கள் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய நேரிடும்.

அதேபோல் அவசரகால சட்டமானது அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கல், ஊழலுக்கு எதிராக மட்டுமே கையாளப்படும். வேறு எந்த காரணத்திற்கும் இது கையாலப்படாது என ஜனாதிபதியே வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். 

ஆகவே எக்காரணம் கொண்டும் இதனை பயன்படுத்தி ஜனநாயக அடக்குமுறை கையாலப்படாது.

அதேபோல் அவசரகால சட்டம் ஜனநாயக எதிர்ப்பு வேலைத்திட்டம் என எதிர்கட்சிகள் கூறுகின்றனர்.  ஆனால் இது ஜனநாயக விரோத செயற்பாடு அல்ல. மக்களின் அத்தியாவசிய பொருட்களை பத்துக்கும், மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும், நெல் ஆலைகளை வைத்துக்கொண்டு அரிசி ஊழலில் ஈடுபடும், ஒரு சில வியாபார மாபியாகாரர்களின் செயற்பாடுகளை தடுத்து மக்களுக்கான நுகர்வுப்பொருட்களை பெற்றுக்கொடுக்க எடுக்கும் செயற்பாடு ஆகும்.

ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது. எனவே அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியமை ஜனநாயக செயற்பாடாகும் எனவும் அவர் கூறனார்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59