ஆர்.ராம்
இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தயாரிக்கப்பட்ட கடிதத்தின் வரைவானது இன்று திங்கட்கிழமை இறுதி செய்யப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கருத்துகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவசியம் ஏற்பட்டால் மாற்றங்களை மேற்கொண்டு இறுதி செய்யப்பட்டு இன்றைய தினமே ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
முன்னதாக, குறித்த கடிதத்தின் வரைவானது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், மற்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது ஊடகங்களில் கசிந்திருந்தது.
அத்துடன், குறித்த கடிதத்தில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக நியமித்த குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப்புலிகளும், இலங்கை இராணுவமும் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டனர் என்று குறித்துரைக்கப்பட்ட விடயம் உள்வாங்கப்பட்டிருந்தமை உள்ளீர்க்கப்பட்டிருந்தது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் குறித்த கடிதம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்ட தோடு இக்கடிதத்தின் பின் இணைப்பாக சுயாதீன ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை இணைக்கும் செயற்பாடும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இந்நிலையில் இக்கடிதத்தின் வரைவு இன்று இறுதி செய்யப்படவுள்ள நிலையில் கூட்டமைப்பின் தலைவர் எவ்விதமான முடிவினை எடுக்கவுள்ளார் என்பதும் யார் யார் கையொப்பங்களை இடவுள்ளனர் என்பதும் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM