(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கும் இத்தாலிக்குமிடையில் வர்த்தகம், முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது குறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்தும் வகைகயிலான இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையேயான வலுவான, நட்புறவான, பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராட்டினார்.
வர்த்தகம், முதலீட்டு உறவுகள், சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும் கலாச்சார செறிவூட்டலுக்கு இத்தாலியில் உள்ள இலங்கைச் சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பையும், கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் இலங்கைக்கும் ரோமுக்கும் இடையே நிலவிய வலுவான இராஜதந்திர உறவுகளின் வரலாற்றையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து இத்தாலி தூதுவருக்கு அமைச்சர் விளக்கியதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் நெருக்கமான உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடர்வதற்கும் இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM