தற்போதுள்ள சூழலில் இயற்கையான முறையில் பிரசவம் நிகழாமல் சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை முறையிலான பிரசவங்களே அதிகமாக நடைபெறுகின்றன. இந்நிலையில் இதுபோன்று சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் தான் குழந்தை பருவத்திலேயே உடற்பருமன் நோய்க்கு ஆளாகி வருவதாக அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள ஹார்வார்ட் வைத்தியசாலை மற்றும் ஆய்வுமைய விஞ்ஞானிகள் ஓர் ஆய்வின் தெரிவித்திருக்கிறார்கள்.
மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான் இதற்கு காரணம் என்றாலும், உடற்பருமன் நோயை தாக்கக்கூடிய வாய்ப்பு இத்தகைய சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் உடற்பருமனை உருவாக்கும் மைக்ரோபயோட்டா என்ற பாக்டிரியாக்கள் இயற்கையான முறையில் பிரசவம் நிகழும் போது அவை வெளியேறிவிடுவதாகவும், சிசேரியன் செய்யும் போது, அவை வெளியேறாமல் தோலின் வழியாக வெளியேற வேண்டிய சூழலுக்கும் ஆளாகின்றதாம். இதனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் இவ்வகையான பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று உடற்பருமனை அதிகப்படுத்துகிறது என்றும் சொல்கிறார்கள்.
இதனால் குழந்தை வயிற்றில் உண்டானதும் போதிய அளவு உடற்பயிற்சி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழவேண்டும் என்று மனதளவில் தயாராகுதல், சரிசமவிகித ஊட்டச்சத்துள்ள உணவு ஆகியவற்றைப் பின்பற்றினால் இதனை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
டொக்டர் எஸ் அசோக் M.S.,
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM