மன்னார் பேசாலை பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட பொது மயானத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா நேற்று வியாழக்கிழமை மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
பேசாலை மயான பகுதியின் பின்புறம் உள்ள காணி ஒன்றில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி 51 கிலோ 250 கிராம், கேரள கஞ்சா போதைப்பொருளே பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளது.
மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM