(எம்.எப்.எம்.பஸீர்)
பெண்களை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த இரு வருடங்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் இரானுவ வீரர், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் தொடர்பிலான விளம்பரங்களை மையப்படுத்தி பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள சந்தேக நபர், தன்னை உயர் பதவியில் உள்ள ஒருவராக சித்திரித்து திருமணம் செய்துகொள்ளும் உறுதியை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.
அவ்வாறு குறித்த பெண்களுடன் நெருக்கமாக பழகியுள்ள சந்தேக நபர், தனது தாயாருக்கு புற்று நோய் எனக் கூறி அவர்களிடம் கைமாற்றுக்கு பணம் பெற்றுக்கொண்டு, அதனை திருப்பிக் கொடுக்காது இந்த மோசடிகளை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்த்த சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி. அதிகாரிகள் 2 வருடங்களின் பின்னர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM