இலங்கையின் துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் இந்தியாவுக்கு தாரைவார்ப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் என்பது இறையாண்மையை பாதிக்கும் செயலாகும் என கடும் ஆட்சேபனையை மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
தெற்காசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக எம்.பி. வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் பொருளாதாரத்தை இலங்கைக்கு முன்பதாக விஸ்தரிப்பதில் அதிக நாட்டம் கொண்டு தற்போது நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
அதேவேளை எமது நாட்டின் துறைமுகங்களையும் விமானநிலையங்களையும் இந்தியாவிற்கு வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துறைமுகங்கள், விமானநிலையங்கள் என்பன நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு பட்டவையாகும். எனவே அவற்றின் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும். அதனை வேறொரு நாட்டிற்கு வழங்கக்கூடாது. இலங்கையில் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளானது இறையாண்மைக்கும் சுயாதீனத்திற்கும் ஆபத்தாக அமையும்.
அது மட்டுமல்ல இச்செயற்பாடானது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமையும். தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமாக அமையும். மறுசீரமைப்பு என்ற செயலில் அரசு வளங்களையும் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட முக்கிய பொருளாதார மையங்களையும் இந்தியாவுக்கும் வேறு பல நாடுகளுக்கும் வழங்கும் கொள்கையையே முன்னெடுக்கிறது.
தெற்காசியாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தமது பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ளும் முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கின்றது. நேபாளம், பூட்டான், மாலைத்தீவு மற்றும் இலங்கை என தனது பொருளாதாரத்தை விஸ்தரித்து முழு தெற்காசியாவிலும் தனது பலத்தை பலப்படுத்திக்கொள்ளவே இந்தியா முயற்சிக்கின்றது. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM