பொறுப்புடன் செயற்படாவிடின் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் - எச்சரிக்கிறார் நிமல் லான்சா

Published By: Gayathri

02 Sep, 2021 | 12:19 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும், அதன் பின்னரும் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும். 

அவ்வாறில்லை எனில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைகள் செய்கின்ற அர்ப்பணிப்புக்களின் பலன் அற்றுப்போகும்.

நாட்டின் பொருளாதாரமும் சரிவடையக்கூடும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும், அதன் பின்னரும் தொற்றினைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, பொருளாதார செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியத்துவமுடையதாகும். அவ்வாறில்லை எனில் முழுநாட்டு மக்களும் அதனால் ஏற்படக்கூடிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மாத்திரமல்ல, நாட்டின் அனைத்து துறைகளும் சரிவடையக்கூடும். 

இதன் காரணமாக நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமையளித்து பொருளாதார செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

கொவிட் தொற்று எமது நாட்டுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. இதனால் தற்போதுள்ள பொருளாதார நிலைமை தொடர்பில் புரிதலுடனும் பொறுப்புடனும் அரசாங்கம் செயற்படுகிறது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21