மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 காட்டு யானைகளால் மக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டதாகவும், யானைகள் கிராமத்தில் மக்கள் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, மா, பலா போன்ற பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமை(31) இரவு 8 மணியளவில் அக்கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அங்கிருந்து பயிர்களை துவம்சம் செய்து வேளை மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், விரட்டியுள்ளனர். பின்னர் இரவு 11 மணியளவில் தான் கிராமத்தை விட்டு துரத்தியுள்ளனர்.
பின்னர் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் அக்கிராமத்திற்குள் புகுந்த அதே காட்டுயானைகள் அங்கு மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மரவெள்ளி தென்னை, மா, மற்றும் பலா போன்ற பயிர்களை முற்றாக அழித்து துவம்சம் செய்துவிட்டு அதிகாலை 5 மணியளவிலதான் கிராமத்தை விட்டு நகர்ந்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமது கிராமத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அழிவுகளும், இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், அதுபற்றி இன்னும் தமக்குரிய தீர்க்கமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்காசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM