தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதில் முன்னுரிமை வழங்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பிடம் செந்தில் கோரிக்கை

Published By: Digital Desk 4

01 Sep, 2021 | 04:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். அது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுடனான சந்திப்பில் எடுத்துக் கூறியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Articles Tagged Under: செந்தில் தொண்டமான் | Virakesari.lk

உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிதியான வைத்தியர் அலக்காங்சிங்கை சந்தித்து கலந்துரையாடினோம்.

இந்த சந்திப்பில் என்னுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனெனில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்றவகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பிரதான கடமை.

அதனால் அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் விடயத்தில் முன்னுரிமை வழங்கவேண்டியதன் தேவை தொடர்பாக எடுத்துக்கூறினோம். 

குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவாக தடுப்பூசி வழங்கவேண்டும் என்பதை நாங்கள் எடுத்துகூறியதை உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக எமக்கு உத்தரவாதம் வழங்கினார்.

அத்துடன் கொவிட் தொற்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என யாருக்கும் தெரியாது. வைரஸ் பலவையான திரிபுகளாக மாறிவருகின்றது.

அதனால் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கொவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான வழிகாட்டல் ஒன்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மலையகத்தில் மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். அதுதொடர்பாக கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கும் இதன்போது இனக்கம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47