பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று நேற்று 31 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளது.
இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவில், 01 ஆம் திகதியிலும் வெலிடை பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆம் திகதி வியாழக்கிழமையும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவில் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும், அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை அன்றும், எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவ வீரர்களின் உதவியுடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த வாரம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலும், 9 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மிகாஹிவுல பிரதேச செயலாளர் பிரிவிலும், எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவிலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி சோர்ணதொட்ட பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM