(எம்.மனோசித்ரா)
புளியங்குளம் பொலிஸ் பிரிவில் கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் 201 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த பிரிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது , அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய முள்ளியவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். புளியங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM