“வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாராக உள்ளது” 

Published By: Digital Desk 3

31 Aug, 2021 | 02:51 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பினும் கூட, இவ்விவகாரத்திற்கு இயலுமானளவு விரைந்து தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரச கட்டமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் செயற்திறன்மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுவிடயத்தில் இயலுமான உதவிகளை வழங்குமாறு சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம். 

மேலும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்குத் தீவிர முனைப்புடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தயாராக இருக்கின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமையன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இணையவழிக்கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட புதிய நியமனங்களைத் தொடர்ந்து, கடந்த 6 மாதகாலப்பகுதியில் அலுவலகத்தின் செயற்பாடுகள் மேலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன. 

இதுவரையான காலப்பகுதியில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த முறைப்பாடுகள் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதன் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17