(எம். எம். சில்வெஸ்டர்)
டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில் இன்று மாலை இலங்கை இன்னுமொரு பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான பிரிவு 64 இன் ஈட்டி ஏறிதல் போட்டியில் பங்கேற்ற துலான் கொடிதுவக்கு 65.61 மீற்றர் தூரம் வீசி வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் சம்பத் ஹெட்டியாரச்சி மற்றும் துலான் கொடிதுவக்கு ஆகிய இலங்கையர்கள் இருவரும் பங்கேற்றனர். இதில் சம்பத் ஹெட்டியாரச்சி 49.94 மீற்றர் தூரம் எறிந்து 9ஆவது இடத்தை பெற்றார்.
எனினும், துலான் ஒவ்வொரு முயற்சிகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதில் மூன்றாவது முயற்சியில் 65.61 மீற்றர் தூரம் வீசி 5 ஆவது முயற்சி வரை 2 ஆம் நிலையில் இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவின் புரியன் மைக்கல் 6ஆவது கடைசியுமான முயற்சியில் 66.29 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது நிலைக்கு முன்னேறினார். துலானின் கடைசி முயற்சியில் 65.05 மீற்றர் பதிவானது.
இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சுமித் 68.88 மீற்றர் தூரம் வீசி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
அவுஸ்திரேலியாவின் புரியன் மைக்கல் வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கையின் துலான் வெண்கல பதங்கத்தை வென்றெடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM