ரயில்வே ஊழியர்களுக்காக அனுராதபுரம், புத்தளம் பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையங்கள்

Published By: Vishnu

30 Aug, 2021 | 10:50 AM
image

ரயில்வே துறையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுராதபுரம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களில் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க இலங்கை ரயில்வே திணைக்களம் பரிசீலித்து வருகிறது.

கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களின் சுகாதார வசதிக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து திணைக்களம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரால் அண்மையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

இந் நிலையில் கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மேலதிகமாக, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தகவல்களின்படி ரயில்வே துறையின் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01