உடுவில் மகளிர் கல்லூரியின் நிருவாக சபையினாலும், பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவினாலும் கல்லூரியின் அதிபர் திருமதி ஷிராணி மில்ஸினை பலவந்தமாக இளைப்பாறச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சர்வதேச நாடுகளில் இயங்கும் உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை. ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்ரேலியா இருக்கும் உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கங்களினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தன்னுடைய சேவைகளினைப் தொடர்ந்தும் பாடசாலைக்கு வழங்கவிரும்புகிறேன் என திருமதி மில்ஸ் பேராயருக்கும், நிருவாக சபைக்கும் அறிவித்திருந்த போதும், அவர்கள் பாடசாலையின் இந்த வரலாற்றினைப் புறக்கணித்துள்ளார்கள்.
திருமதி மில்ஸினால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு எந்தவிதமான பதிலும் நிருவாகத்தினால் வழங்கப்படவில்லை. ஆனால் நிருவாகிகள் அதிபர் பதவிக்கான விளம்பரத்தினை வெளியிட்டனர். அதிபரினால் வழங்கப்பட்ட கடிதங்களைப் பேராயரும் நிருவாகக்குழுவும் புறந்தள்ளியமையினையும், திருமதி மில்ஸ் மிகவும் மோசமான முறையிலே அண்மையில் நிருவாகக்குழுவினால் நடத்தப்பட்டமையும் நிருவாகக்குழுவினது தீயநோக்கங்களினையே வெளிக்காட்டுகின்றன.
தன்னுடைய தரிசனமிக்க தலைமைத்துவத்தினாலும், சுயநலமற்ற அர்ப்பணிப்பினாலும் இடைவிடாத கடின உழைப்பினாலும் அதிபர் என்ற வகையிலே தனது 12 வருடப் பதவிக்காலப்பகுதியில் கல்வித்துறையிலும் சரி, விளையாட்டுத் துறையிலும் சரி, செயற்கலைகளிலும், கட்புலக் கலைகளிலும், தகவல் தொழில்நுட்பத்திலும் பாடசாலையினை மிகவும் உயர்ந்த சாதனைகளுக்கு திருமதி ஷிராணிமில்ஸ் இட்டுச்சென்றிருக்கிறார். அவருடைய சேவைகளினை குறைந்தகாலத்தில் முடிவுக்குக் கொண்டுவருகின்றமை கல்லூரி மாணவிகளின் மனநிலையில் தாக்கத்தினைச் செலுத்தி இருப்பதுடன், பாடசாலையின் விழுமியங்களுக்கு சேதத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெற்றோரினாலும் மாணவர்களினாலும் முன்னெடுக்கப்படும தொடர்ச்சியான போராட்டங்கள் இதனையேவெளிக்காட்டுகின்றன.
கல்லூரியின் முகாமைத்துவத்தினராலும், பேராயரினாலும் திருமதி மில்ஸினை இளைப்பாறச்செய்து வேறு ஒருவரினைஅதிபராகநியமிக்கும்முனைப்புக்கள்ஆரம்பித்தஉடனேயேஉலகம்முழுவதிலும்உள்ளகல்லூரியின்பழையமாணவிகள்சங்கங்களாகிய நாம் பாடசாலையின் தற்போதைய அதிபரின் பதவிக்காலத்தினை மேலும் 5 வருடங்களுக்குந நீடிக்கும்படியும், அதன்மூலமாக அவரினால் தொடங்கப்பட்டுள்ள பாடசாலையினை மறுசீரமைக்கும் முயற்சிகளினை அவர் முழுமைப்படுத்திட முடியும் எனவும் குறிப்பிட்டு கடிதங்களினைப் பேராயருக்கும் நிருவாகத்துக்கும் அனுப்பிவைத்தோம்.
புதிய அதிபர்பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கான இறுதித்தினத்துக்கு முன்பாக இந்தக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தக்கடிதங்களுக்கான பதிலினையோ அல்லது இந்தக்கடிதங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவோ 7 தினங்களுக்குள் கடிதத்தினை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கும்படி நாம் அவர்களைக்கேட்டிருந்தோம்.
இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதங்களை யாராவது பார்வையிட விரும்பின் நாம் அவற்றினை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம். ஜூன் மாதத்திலே அனுப்பப்பட்ட இந்தக்கடிதங்களுக்கு எந்த விதமான பதிலும் எமக்குக் கிடைக்காதமையினை அடுத்து பழைய மாணவிகள்சங்கங்கள் திரும்பவும் 3 வாரங்களின் பின்னர் கடிதங்களைப் பேராயருக்கும் நிருவாகத்துக்கும் அனுப்பிவைத்தோம்.
அந்தக்கடிதங்கள் குறித்தும் அவை தங்களுக்குக் கிடைத்ததாகவோ அல்லது அவற்றுக்கான பதில்களோ எம்மை இதுவரையில் வந்தடையவில்லை.
கடந்த ஆகஸ்ட்மாதம் 15 ஆம்திகதி தம்முடன் ஓர் உரையாடலுக்கு வரும்படி திருமதி மில்ஸ் பேராயரினாலும் அவரது பாரியாரினாலும் அழைக்கப்பட்டார். அடுத்த நாள் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவரது 60 ஆவது பிறந்ததினத்துக்கு ஒருநாள் முன்பாக, செப்டெம்பர் 6 ஆம்திகதி அன்று அவர் தனது பொறுப்புக்கள் யாவற்றினையும் கையளிக்கவேண்டும் எனவும் பாடசாலையினை விட்டுவெளியேறவேண்டும் எனவும் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
திருமதி சுனீத்தா ஜெபரட்ணம் பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் இணையத்தளத்திலே உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. எனினும் திருமதி மில்ஸின் பதவிநீக்கம் பற்றி எதுவும் அங்கே சொல்லப்பட்டிருக்கவில்லை.
தென்னிந்தியத் திருச்சபையின் தலைமைத்துவத்தின் இவ்வாறான அடாவடித்தனமான சர்வாதிகாரத் தன்மையினையும் அவர்களுடன் இணைந்து செயற்படும் நியாயமற்ற உள்ளூர் அரசியல்வாதிகளையும் நாம் முழு சமுதாயத்துக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். இந்த நிலைமை முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதுடன், அதிகாரத்திலே இருப்பவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளவேண்டும்.
திருமதி ஷிராணி மில்ஸினை வலுக்கட்டாயமாக அதிபர்பதவியில் இருந்து இளைப்பாறச் செய்தமை தவறு என்பதினை நாம் இங்கு வலியுறுத்துகிறோம். இந்த விடயத்தினை சமூகநலனுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதிஇ பாடசாலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினையும் இந்த அநியாயத்துக்கு காரணமானவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் படி நாம் உங்கள் எல்லோரினையும் பணிவுடன் கேட்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM