திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகார் தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்தில் இது வரை ஐம்பது பேர் வரை தொற்றுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகாளை முன்னெடுத்து வருவதாகவும் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
கந்தளாய் அக்போபுர வான் எல வட்டுகச்சி மற்றும் பேராறு போன்ற பகுதியிலிருந்து பொது மக்கள் தாமாக முன்வந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சென்று அன்டிஜன் பரிசோதனைகளை பரிசோதித்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM