புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது

Published By: Digital Desk 4

25 Aug, 2021 | 09:53 PM
image

(எம்.மனோசித்ரா)

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

எனவே புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டமையால் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்களுக்கு மீண்டுமொரு நோய் நிலைமை ஏற்படும் போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாகும்.

எனவே புற்று நோயாளர்கள் தமது புற்று நோய்க்கான மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அதே போன்று புற்று நோயிலிருந்து குணமடைந்து மருந்துகளை பாவித்துக் கொண்டிருப்பவர்கள் வைத்தியர்களின ஆலோசனைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தோடு இவ்வாறானவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை எனில் பிரதேசத்திலுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்தில் தம்மை பதிவு செய்து நடமாடும் சேவை ஊடாகவேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51