(எம்.மனோசித்ரா)
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
எனவே புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டமையால் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்களுக்கு மீண்டுமொரு நோய் நிலைமை ஏற்படும் போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாகும்.
எனவே புற்று நோயாளர்கள் தமது புற்று நோய்க்கான மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
அதே போன்று புற்று நோயிலிருந்து குணமடைந்து மருந்துகளை பாவித்துக் கொண்டிருப்பவர்கள் வைத்தியர்களின ஆலோசனைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தோடு இவ்வாறானவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லை எனில் பிரதேசத்திலுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்தில் தம்மை பதிவு செய்து நடமாடும் சேவை ஊடாகவேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM