ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்கு தலிபான்கள் பாதுகாப்பான வழியைக் கொடுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரியுள்ளார்.
ஜி-7 தலைவர்களின் அவசர மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து, போரிஸ் ஜோன்சன் "கடைசி நேரம் வரை" நாட்டிலிருந்து மக்களை வெளியேற்றுவதை இங்கிலாந்து தொடரும் என்று உறுதியளித்தார்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் விமானம் மூலம் வெளியேற்றப்படலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வருகை இல்லாமல் ஆகஸ்ட் 31 க்குப் பிறகு ஆப்கானை விட்டு அனைவரையும் வெளியேற்ற முடியாது என்று எச்சரித்த பிரிட்டன் உட்பட ஜி-7 தலைவர்களில் பலர், வீரர்களை திரும்பப் பெறுவதை தாமதப்படுத்துமாறு அமெரிக்காவை வலியறுத்தினர்.
எனினும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் தனது பணியை முடிக்க அமெரிக்கா முழு மூச்சுடன் செயற்படுவதாக இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
90 நிமிட காணொளி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் ஜி-7 தலைவர்கள், ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்குப் பிறகும் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் உடனடி முன்னுரிமை என்று கூறினர்.
இந்த சந்திப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஜி-7 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM